மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பிரிட்டன் வர்த்தக, முதலீட்டு இயக்குநராக குமார் நியமனம்

இந்தியாவுக்கான பிரிட்டன் வர்த்தகம் மற்றும் முதலீட்டு இயக்குநர் ஜெனரலாக இந்திய வம்சாவளி பொருளாதார வல்லுநர் குமார் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Updated On :1 ஆகஸ்ட் 2013, 5:55 pm

இந்தியாவுக்கான பிரிட்டன் வர்த்தகம் மற்றும் முதலீட்டு இயக்குநர் ஜெனரலாக இந்திய வம்சாவளி பொருளாதார வல்லுநர் குமார் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவை நாடு முழுவதும் பலப்படுத்துவதற்காக இந்தப் பதவி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. 5ஆம் தேதி முதல் மும்பையிலிருந்து செயல்பட உள்ள குமார், இந்தியாவுக்கான பிரிட்டன் துணைத் தூதராகவும் (மேற்கு) பொறுப்பு வகிப்பார்.

இந்திய வம்சாவளி தம்பதிக்கு லண்டனில் பிறந்த குமார் அய்யர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் எம்.பில். பட்டம் பெற்றுள்ளார். கடந்த 2008இல் பிரிட்டன் அரசில் துணை இயக்குநராக பணியில் சேர்ந்தார். முன்னதாக பாஸ்டன் ஆலோசனை குழுமத்தில் நிதி சேவைகள் பிரிவில் பணியாற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.