மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

ஜனவரி முதல் 4ஜி சேவை: பிஎஸ்என்எல் திட்டம்

அடுத்த மாதம் முதல் 4ஜி இணையதள சேவையை வழங்க, மத்திய அரசுக்குச் சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடட் (பிஎஸ்என்எல்) நிறுவனம் முடிவு செய்துள்ளது.

News image
Updated On :26 டிசம்பர் 2017, 12:30 am IST

அடுத்த மாதம் முதல் 4ஜி இணையதள சேவையை வழங்க, மத்திய அரசுக்குச் சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடட் (பிஎஸ்என்எல்) நிறுவனம் முடிவு செய்துள்ளது.
 கேரள மாநிலத்தில் தொடங்கி, அந்தச் சேவையை படிப்படியாக நாடு முழுவதும் அறிமுகப்படுத்த, அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
 இதுகுறித்து பிஎஸ்என்எல் தலைவர் அனுபம் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது:
 எங்களது 4ஜி சேவையை நாங்கள் கேரள மாநிலத்தில் முதல் முறையாகத் தொடங்கவிருக்கிறோம். ஏற்கெனவே நாங்கள் வழங்கி வரும் 3ஜி சேவை வேகம் குறைவக உள்ள பகுதிகளை மட்டும் முதலில் தேர்ந்தெடுத்து, அங்கு 4ஜி சேவையாக தரமேற்றம் செய்யத் திட்டமிட்டுள்ளோம்.
 கேரளத்துக்கு அடுத்தபடியாக, எங்களுக்கு அதிக வருவாய் அளித்து வரும் ஒடிஸா தொலைத் தொடர்பு சரகத்தில் 4ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும்.
 ஆரம்பக்கட்ட 4ஜி அறிமுங்களுக்கு, தற்போது எங்களிடம் உள்ள 2,100 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஒதுக்கீடே போதுமானது ஆகும். எனினும், நாடு முழுவதும் அந்தச் சேவையை அறிமுகப்படுத்த, அரசிடம் கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு கோரியுள்ளோம் என்றார் அவர்.
 மும்பை மற்றும் தில்லி சரகங்களைத் தவிர, இந்தியா முழுவதும் 10 கோடி செல்லிடப் பேசி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள பிஎஸ்என்எல், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 10,000 4ஜி கோபுரங்களை நிறுவ திட்டமிட்டுள்ளது.
 இதுதவிர, 4ஜி சேவைக்கான தனி வணிக அடையாளத்தையும் உருவாக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அனுபம் ஸ்ரீவாஸ்தா தெரிவித்தார்.
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.