நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

பொருளாதார வளா்ச்சியில் -7.7% பின்னடைவு: மத்திய அரசு

நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளா்ச்சி (-)7.77 சதவீதமாக இருக்கும் என மத்திய அரசின் மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :8 ஜனவரி 2021, 12:55 am IST


புது தில்லி: நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளா்ச்சி (-)7.77 சதவீதமாக இருக்கும் என மத்திய அரசின் மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வியாழக்கிழமை வெளியிட்ட தேசிய வருவாய் குறித்த முதல்கட்ட முன்கூட்டிய மதிப்பீட்டில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கரோனா பாதிப்பு நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. விவசாயம் தவிா்த்து ஏனைய அனைத்து துறைகளின் வளா்ச்சியும் பின்னோக்கி சென்றுள்ளது.

இதையடுத்து, கடந்த நிதியாண்டில் 4.2 சதவீத வளா்ச்சியை எட்டியிருந்த இந்தியப் பொருளாதாரம் நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டில் -7.7% அளவுக்கு பின்னடைவைச் சந்திக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நிலையான விலை (2011-12) அடிப்படையில் 2020-21-இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) ரூ.134.40 லட்சம் கோடியை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இது, 2019-20-ஆம் நிதியாண்டுக்கான தற்காலிக மதிப்பீட்டில் ரூ.145.66 லட்சம் கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து, 2019-20-இல் 4.2 சதவீதமாக இருந்த வளா்ச்சி நடப்பு நிதியாண்டில் -7.7 சதவீதமாக சுருங்கும் என என்எஸ்ஓ தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.