நாட்டின் முதன்மையான அடமானக்கடன் வழங்கும் நிறுவனமான எச்டிஎஃப்சி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிகர லாபம் 5,331 கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலாண்டில் நிகர லாபம் 4,059 கோடியாக இருந்து தற்போது 5,331 கோடியாக உயர்ந்ததால் இந்நிறுவனம் 31 சதவீத வளர்ச்சியைக் கண்டிருக்கிறது.
இதையும் படிக்க | தில்லியிலும் நிலைமை மாறுகிறது.. புதிதாக 85 பேருக்கு கரோனா
கடந்த ஆண்டின் மொத்த நிகர லாபம் 3,614 கோடியாக இருந்து தற்போது இந்த காலாண்டின் முடிவில் 5,041 கோடியுடன் 39 சதவீத வளர்ச்சியை அடைந்திருக்கிறது.
2021 - 2022 நிதியாண்டில் ஒட்டுமொத்த வருவாய் 29,959 கோடியில் இருந்து 30,997 கோடியாகவும் உயர்ந்திருக்கிறது.
நிர்வாகத் தரப்பிலிருந்து அளித்த தகவலில் , ' கரோனா தொற்று காலத்திலும் வீட்டு கடன்களை வழங்கி வாடிக்கையாளர்களுக்கு உதவியிருக்கிறோம் தற்போது தொழில்களும் பழைய நிலையில் இருந்து மீண்டுவருகின்றன. இந்நிலையில் கரோனா மூன்றாவது அலையின் தாக்கம் ஒருவேளை பழைய நிலைக்கே நம்மை தள்ளலாம் " எனத் தெரிவித்தனர்.