எச்டிஎஃப்சியின் நிகர லாபம் 5,331 கோடியாக உயர்வு

நாட்டின் முதன்மையான அடமானக்கடன் வழங்கும் நிறுவனமான  எச்டிஎஃப்சி  நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில்  நிகர லாபம்  5,331 கோடியாக உயர்ந்துள்ளது.
எச்டிஎஃப்சியின்  நிகர லாபம் 5,331 கோடியாக உயர்வு
எச்டிஎஃப்சியின் நிகர லாபம் 5,331 கோடியாக உயர்வு

நாட்டின் முதன்மையான அடமானக்கடன் வழங்கும் நிறுவனமான  எச்டிஎஃப்சி  நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில்  நிகர லாபம்  5,331 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலாண்டில் நிகர லாபம்  4,059 கோடியாக இருந்து தற்போது  5,331 கோடியாக உயர்ந்ததால்  இந்நிறுவனம்  31 சதவீத வளர்ச்சியைக்  கண்டிருக்கிறது.

கடந்த ஆண்டின் மொத்த நிகர லாபம் 3,614 கோடியாக இருந்து தற்போது இந்த காலாண்டின் முடிவில்  5,041 கோடியுடன் 39 சதவீத வளர்ச்சியை அடைந்திருக்கிறது.

2021 - 2022 நிதியாண்டில்  ஒட்டுமொத்த வருவாய் 29,959 கோடியில் இருந்து 30,997 கோடியாகவும்  உயர்ந்திருக்கிறது.

நிர்வாகத் தரப்பிலிருந்து  அளித்த தகவலில் , ' கரோனா தொற்று காலத்திலும்   வீட்டு கடன்களை  வழங்கி வாடிக்கையாளர்களுக்கு உதவியிருக்கிறோம் தற்போது தொழில்களும் பழைய நிலையில் இருந்து மீண்டுவருகின்றன. இந்நிலையில் கரோனா  மூன்றாவது அலையின் தாக்கம் ஒருவேளை பழைய நிலைக்கே நம்மை தள்ளலாம் " எனத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com