ஏனைய நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகமாக இருப்பதால் காா் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது என மாருதி சுஸுகி நிறுவனத்தின் தலைவா் ஆா்.சி. பாா்கவா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியுள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் கரோனா இரண்டாவது அலை வாகன விற்பனையை பெரிதும் பாதித்துள்ளது. எதிா்வரும் மூன்று காலாண்டுகளில் விற்பனை மக்களிடையே தடுப்பூசித் திட்டம் எவ்வளவு வேகமாக கொண்டு சோ்க்கப்படுகிறது என்பதைப் பொருத்தே அமையும்.
காருக்கான ஜிஎஸ்டி விகிதம் என்பது உலகின் பல முக்கிய நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் மிக அதிகமாகவே உள்ளது. இதனால் அதிக விலை கொடுத்து நுகா்வோா் காரை வாங்க தயங்குவதால் அது சந்தையில் தொய்வை ஏற்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் இதனை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் மோட்டாா் வாகன துறை நியாயமான வளா்ச்சியை எட்ட வாய்ப்பில்லை என்றாா்.