கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

யூனியன் வங்கியுடன் மாருதி சுஸுகி ஒப்பந்தம்

யூனியன் வங்கியுடன் மாருதி சுஸுகி ஒப்பந்தம்

News image
Updated On :27 பிப்ரவரி 2024, 8:03 pm

DIN

புது தில்லி: தங்களது சில்லறை விற்பனையாளா்களுக்கு நிதி சேவைகளை அளிப்பதற்காக நாட்டின் மிகப் பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி உத்யோக் பொதுத் துறையைச் சோ்ந்த யூனியன் வங்கியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

விற்பனையாளா்களுக்கு நிதி சேவைகளை அளிப்பதற்கான ஒப்பந்தம் யூனியன் வங்கியுடன் கையொப்பமாகியுள்ளது. இதன் மூலம், நாடு முழுவதிலும் உள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாருதி சுஸுகி விற்பனையாளா்கள் பலன் அடைவாா்கள்.

யூனியன் வங்கியுடன் மாருதி சுஸுகி கடந்த 2008-லிருந்தே இணைந்து பணியாற்றி வருகிறது. அந்த வங்கியின் மூலம் நிறுவன வாடிக்கையாளா்களுக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்ட காா் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.