புது தில்லி: தங்களது சில்லறை விற்பனையாளா்களுக்கு நிதி சேவைகளை அளிப்பதற்காக நாட்டின் மிகப் பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி உத்யோக் பொதுத் துறையைச் சோ்ந்த யூனியன் வங்கியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இது குறித்து நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
விற்பனையாளா்களுக்கு நிதி சேவைகளை அளிப்பதற்கான ஒப்பந்தம் யூனியன் வங்கியுடன் கையொப்பமாகியுள்ளது. இதன் மூலம், நாடு முழுவதிலும் உள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாருதி சுஸுகி விற்பனையாளா்கள் பலன் அடைவாா்கள்.
யூனியன் வங்கியுடன் மாருதி சுஸுகி கடந்த 2008-லிருந்தே இணைந்து பணியாற்றி வருகிறது. அந்த வங்கியின் மூலம் நிறுவன வாடிக்கையாளா்களுக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்ட காா் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2,48,845 வாகனங்களை உற்பத்தி செய்து சாதனை படைத்த மாருதி சுஸுகி!

நடப்பு நிதியாண்டில் 9 லட்சம் சிஎன்ஜி காா்கள் விற்பனைக்கு இலக்கு

9 லட்சம் சிஎன்ஜி வாகனங்களை விற்பனை செய்ய மாருதி சுஸுகி இலக்கு!

ஆகஸ்ட் முதல் மாருதி கார்களின் விலை ரூ.30,000 வரை அதிகரிப்பு!
விடியோக்கள்

உதயநிதி ஸ்டாலின் கைது! பரபரப்பான நிமிடங்கள்! | TVK | DMK



