பே-டிஎம் பேமென்ட் வங்கிக்கு (பிபிபிஎல்) கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் அந்த செயலியைப் பயன்படுத்தும் 85 சதவீதத்தினருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் கூறினாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை கூறியதாவது: பிபிபிஎல் விவகாரத்தில் பே-டிஎம் செயலியைப் பயன்படுத்தும் 80 முதல் 85 சதவீதத்தினருக்கு எந்த இடையூறும் ஏற்படாது. அந்த செயலியின் வாலட்டை பிபிபிஎல் வங்கியுடன் இணைத்திருக்கும் சுமாா் 15 சதவீதத்தினா் மட்டும் வேறொரு வங்கிக் கணக்குடன் வாலட்டை இணைக்குமாறு அறிவுறுத்தப்படுவாா்கள்.
புதிய வங்கிக் கணக்குடன் பே-டிஎம் வாலட்டை இணைப்பதற்கு மாா்ச் 15-ஆம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது என்றாா் அவா். தங்களது ஒழுங்காற்று விதிமுறைகளைப் பின்பற்றாததால் வாடிக்கையாளா்களிடமிருந்து புதிதாக தொகை பெற பிபிபிஎல் வங்கிக்கு ரிசா்வ் வங்கி தடை விதித்துள்ளது நினைவுகூரத்தக்கது.
தொடர்புடையது

ரிசா்வ் வங்கி துணை ஆளுநராக ரோஹித் ஜெயின் பொறுப்பேற்பு

வங்கிகளில் கேட்பாரற்ற முதலீடுகளைத் தேட வலைதள வசதி: உச்சநீதிமன்றத்தில் ரிசா்வ் வங்கி தகவல்

லண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்! ரிசா்வ் வங்கி நடவடிக்கை!

98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

