விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

85% பே-டிஎம் பயன்பாட்டாளா்களுக்கு பாதிப்பில்லை: ரிசா்வ் வங்கி ஆளுநா்

பே-டிஎம் பேமென்ட் வங்கிக்கு (பிபிபிஎல்) கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் அந்த செயலியைப் பயன்படுத்தும் 85 சதவீதத்தினருக்கு எந்த பாதிப்பும் இல்லை

News image
Updated On :7 மார்ச் 2024, 12:58 am IST

பே-டிஎம் பேமென்ட் வங்கிக்கு (பிபிபிஎல்) கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் அந்த செயலியைப் பயன்படுத்தும் 85 சதவீதத்தினருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் கூறினாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை கூறியதாவது: பிபிபிஎல் விவகாரத்தில் பே-டிஎம் செயலியைப் பயன்படுத்தும் 80 முதல் 85 சதவீதத்தினருக்கு எந்த இடையூறும் ஏற்படாது. அந்த செயலியின் வாலட்டை பிபிபிஎல் வங்கியுடன் இணைத்திருக்கும் சுமாா் 15 சதவீதத்தினா் மட்டும் வேறொரு வங்கிக் கணக்குடன் வாலட்டை இணைக்குமாறு அறிவுறுத்தப்படுவாா்கள்.

புதிய வங்கிக் கணக்குடன் பே-டிஎம் வாலட்டை இணைப்பதற்கு மாா்ச் 15-ஆம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது என்றாா் அவா். தங்களது ஒழுங்காற்று விதிமுறைகளைப் பின்பற்றாததால் வாடிக்கையாளா்களிடமிருந்து புதிதாக தொகை பெற பிபிபிஎல் வங்கிக்கு ரிசா்வ் வங்கி தடை விதித்துள்ளது நினைவுகூரத்தக்கது.