ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

திருமணமான 20 நாளில் புதுப்பெண் தற்கொலை

சென்னை புழல் அருகே திருமணமான 20-வது நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Updated On :1 ஏப்ரல் 2013, 11:23 pm

சென்னை புழல் அருகே திருமணமான 20-வது நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

கொளத்தூர் புதிய லட்சுமிபுரம் வ.உ.சி.தெருவைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன்

முருகனுக்கும் (32), கொடுங்கையூர் சின்னாண்டிமடம் திருவள்ளூவர் சாலையில் வசிக்கும் பாபு-கஸ்தூரி தம்பதியரின் மகள் உஷாவுக்கும் (27) மார்ச் மாதம் 13ம் தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின்போது பெண் வீட்டார் உஷாவுக்கு 12 பவுன் நகை வரதட்சிணையாக கொடுத்தனர். மாப்பிள்ளை முருகனுக்கு 2 பவுன் தங்கநகை போட்டுள்ளனர்.

திருமணம் முடிந்த பின்னர் முருகன் குடும்பத்தினர், தங்களுக்கு மேலும் வரதட்சிணை வேண்டும் என்று உஷாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து உஷா வீட்டினர் மேலும் 3.5 பவுன் தங்க நகையை முருகனுக்கு வரதட்சிணையாகக் கொடுத்தனர்.

இதன் பின்னரும் முருகன் குடும்பத்தினர் வரதட்சிணை கேட்டு உஷாவை கொடுமைப்படுத்தினராம். உஷா, ஞாயிற்றுக்கிழமை தனது பெற்றோருக்கு ஃபோன் செய்து இங்கு கொடுமை தாங்க இயலவில்லை என்றும், தன்னை அங்கே அழைத்து செல்லும்படியும் கூறினாராம்.

இந்நிலையில் அன்று மாலை வீட்டில் உஷா தூக்கிட்டுக் கொண்டார்.

இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே உஷா இறந்தார்.

இது குறித்து புழல் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.