/

குடும்பத் தகராறை தட்டிக் கேட்ட இளைஞர் கொலை

தங்கையிடம் சரியாக குடும்பம் நடத்தாத மைத்துனரை தட்டிக்கேட்டவர் கொலை செய்யப்பட்டார்.

Updated On :11 ஏப்ரல் 2013, 9:50 pm

தங்கையிடம் சரியாக குடும்பம் நடத்தாத மைத்துனரை தட்டிக்கேட்டவர் கொலை செய்யப்பட்டார்.

ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு, கார்த்திக் (25) என்ற மகனும், அன்னப்பூரணி என்ற மகளும் உள்ளனர். அன்னப்பூரணி குமரன் காலனியைச் சேர்ந்த அன்சாரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

இந்த நிலையில் அன்னப்பூரணியிடம் அன்சாரி சரியாக குடும்பம் நடத்துவதில்லை என்று அவரது அண்ணன் கார்த்திக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை விசாரிக்க சென்ற கார்த்தியை அன்சாரி கொலை செய்து விட்டார்.

இது குறித்து வடபழனி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.