இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

எஸ்.ஐ. மீது கும்பல் தாக்குதல்

சென்னை வியாசார்பாடியில் நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் மீது 3 பேர் கொண்ட கும்பல் தாக்கிவிட்டு தப்பியோடியது.

Updated On :12 ஜூன் 2013, 2:21 am IST

சென்னை வியாசார்பாடியில் நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் மீது 3 பேர் கொண்ட கும்பல் தாக்கிவிட்டு தப்பியோடியது.

இது குறித்த விவரம்:

சென்னை வியாசார்பாடி காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றுபவர் பாஸ்கரன் (56). இவர் ஊர்க்காவல் படையில் பணியாற்றும் பிரபாகரனுடன் திங்கள்கிழமை இரவு பைக்கில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது வியாசார்பாடி பகுதியில் 3 பேர் குடிபோதையில் சாலையில் சத்தமாக பேசிக் கொண்டிருந்தனர். ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பாஸ்கரன் மற்றும் பிரபாகரன் ஆகியோர் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு கூறினர்.

ஆனால் அந்தக் கூட்டத்தில் இருந்த பூபாலன் என்பவர் பாஸ்கரனிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதையடுத்து பாஸ்கரன் மற்றும் பிரபாகரனை குடிபோதையில் இருந்த 3 பேர் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடினர். இது குறித்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் பாஸ்கரன் புகார் அளித்தார். சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய மூவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.