தமிழக அளவில் செயல்பட்டு வந்த தேசிய லீக் கட்சி, அகில இந்திய கட்சியான இந்திய தேசிய லீக் உடன் இணைந்தது.
1994-ல் தொடங்கப்பட்ட இந்திய தேசிய லீக், உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இப்போது இக்கட்சியுடன் தமிழகத்தில் எம். பஷீர் அகமது தலைமையில் செயல்பட்டு வந்த தேசிய லீக் கட்சி இணைந்தது.
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய தேசிய லீக் கட்சியின் செயற்குழு கூட்டத்துக்குப் பிறகு அக்கட்சியின் தேசியத் தலைவர் முகமது சுலைமான் செய்தியாளர்களிடம் பேசியது:
முஸ்லிம் அமைப்புகளை ஓரணியில் திரட்டும் முயற்சியின் முதற்கட்டமாக தேசிய லீக் எங்களுடன் இணைந்துள்ளது.
இந்திய தேசிய லீக் கட்சியின் தமிழக தலைவராக எம். பஷீர் அகமது செயல்படுவார்.
சிறுபான்மை மக்களுக்கு எதிராகச் செயல்படும் பாஜகவுக்கும், சிறுபான்மையினரை ஓட்டு வங்கியாக மட்டும் பயன்படுத்தி ஏமாற்றி வரும் காங்கிரஸýக்கும் மாற்றாக 3-ஆவது அணி அமைக்கும் முயற்சியில் இந்திய தேசிய லீக் ஈடுபடும் என்றார் சுலைமான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கலகக்காரி சான்யா மல்ஹோத்ரா..! அற்புதமான நடிகர் ராஜ்குமார் ராவ்!

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
திமுகவினர் ரூ. 8,000 கூப்பன் வழங்குவதாக தவெக மனு: நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

சபரீசன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் டி.கே. சிவக்குமார் பங்கேற்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

