வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியாக விளையாடியது நம்பிக்கையளித்தது: ரிச்சா கோஷ்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நன்றாக விளையாடியது நம்பிக்கையளித்ததாக இந்திய வீராங்கனை ரிச்சா கோஷ் தெரிவித்துள்ளார்.

News image

ரிச்சா கோஷ் - படம் | பிசிசிஐ

Updated On :16 ஜூன் 2026, 8:31 pm IST

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நன்றாக விளையாடியது நம்பிக்கையளித்ததாக இந்திய வீராங்கனை ரிச்சா கோஷ் தெரிவித்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் நேற்று முன் தினம் (ஜூன் 14) தனது முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் இந்திய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா 68 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 36 ரன்களும், ரிச்சா கோஷ் 34 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நன்றாக விளையாடியது நம்பிக்கையளித்ததாக ரிச்சா கோஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடியது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனெனில், அந்த ஆட்டம் எனக்கு மிகவும் நம்பிக்கையளித்தது. நாங்கள் விளையாடிய பயிற்சி ஆட்டத்தில் நன்றாக விளையாடியதும் என்னுடைய நம்பிக்கையை அதிகரித்ததாக நினைக்கிறேன். அடுத்தடுத்த போட்டிகளை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்றார்.

நடப்பு ஐசிசி டி20 தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கிய நிலையில், நாளை (ஜூன் 17) நடைபெறும் போட்டியில் இந்திய அணி நெதர்லாந்தை எதிர்த்து விளையாடவுள்ளது.

Summary

Indian player Richa Ghosh has stated that performing well in the match against Pakistan was encouraging.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.