பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நன்றாக விளையாடியது நம்பிக்கையளித்ததாக இந்திய வீராங்கனை ரிச்சா கோஷ் தெரிவித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் நேற்று முன் தினம் (ஜூன் 14) தனது முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் இந்திய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா 68 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 36 ரன்களும், ரிச்சா கோஷ் 34 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நன்றாக விளையாடியது நம்பிக்கையளித்ததாக ரிச்சா கோஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடியது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனெனில், அந்த ஆட்டம் எனக்கு மிகவும் நம்பிக்கையளித்தது. நாங்கள் விளையாடிய பயிற்சி ஆட்டத்தில் நன்றாக விளையாடியதும் என்னுடைய நம்பிக்கையை அதிகரித்ததாக நினைக்கிறேன். அடுத்தடுத்த போட்டிகளை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்றார்.
நடப்பு ஐசிசி டி20 தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கிய நிலையில், நாளை (ஜூன் 17) நடைபெறும் போட்டியில் இந்திய அணி நெதர்லாந்தை எதிர்த்து விளையாடவுள்ளது.
Summary
Indian player Richa Ghosh has stated that performing well in the match against Pakistan was encouraging.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











