தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

மின்வெட்டு: பொதுமக்கள் சாலை மறியல்

சென்னையில் மின்வெட்டை கண்டித்து இரண்டு இடங்களில் பொதுமக்கள் வியாழக்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :21 ஜூன் 2013, 10:42 pm

சென்னையில் மின்வெட்டை கண்டித்து இரண்டு இடங்களில் பொதுமக்கள் வியாழக்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொளத்தூர் பகுதியில் வியாழக்கிழமை இரவு திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இதன் விளைவாக அந்தப் பகுதி மக்கள் இரவு தூங்க முடியாமல் தவித்தனர். மேலும் இது குறித்து, மின்வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் செய்தும் மின்வெட்டு சரி செய்யப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அங்குள்ள மின்வாரிய அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மின்வாரிய அதிகாரிகளும், போலீஸாரும் பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.

இதேபோல ராயப்பேட்டையில் மின்வெட்டால் பாதிப்படைந்த பொதுமக்கள், அங்குள்ள மின்வாரிய அலுவலகம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.