சென்னை பெசன்ட் நகரில் உள்ள கலாúக்ஷத்ரா நிறுவனத்தின் இயக்குநராக நடனக் கலைஞர் பிரியதர்ஷனி கோவிந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாரம்பரிய இசை மற்றும் நடனத்தை பயிற்றுவிக்கும் நிறுவனமான கலாúக்ஷத்ரா பவுண்டேஷனை ருக்மணிதேவி அருண்டேல் 1936-ஆம் ஆண்டு தொடங்கினார்.
மத்திய கலாசாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்நிறுவனத்தின் இயக்குநராக இருந்த லீலா சாம்சன் பதவி விலகியதைத் தொடர்ந்து தாற்காலிக இயக்குநராக கருணாகர் மேனன் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் புதிய இயக்குநராக சென்னையைச் சேர்ந்த நடனக் கலைஞர் பிரியதர்ஷினி கோவிந்த் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்குவங்க மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும், கலாúக்ஷத்ரா பவுண்டேஷனின் தலைவருமான கோபாலகிருஷ்ண காந்தி இதனை புதன்கிழமை அறிவித்தார்.
பிரிதர்ஷினி கோவிந்த் உலகம் முழுவதும் நடன நிகழ்ச்சிகளை நடத்தியவர். ஸ்ரீகிருஷ்ணகான சபாவின் நிருத்யசூடாமணி (1998), தமிழக அரசின் கலைமாமணி (1998), யுவகலா பாரதி (2000) உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் விரைவில் பொறுப்பேற்க இருப்பதாக கலாúக்ஷத்ரா நிறுவனம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தினப்பலன்கள் - விருச்சிகம்

அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
மகளிர் மீதான தாக்குதல்... வன்மையாகக் கண்டிக்கத்தக்கது: விஜய்

நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் எம்.பி.க்கள் பங்கேற்க வேண்டும்: காங்கிரஸ்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

