இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 7-ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.
ஆறாவது ஊதியக் குழுவின் முரண்பாடுகளைக் களைந்து தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு ஜூலை 22-ல் அரசாணைகளை வெளியிட்டது. இதில் ஊதிய விகிதத்தில் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றமோ, தர ஊதிய மாற்றமோ பரிசீலனை செய்யப்படாதது ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இந்தப் பிரச்னை தொடர்பாக மூன்று கட்ட போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
முதல் கட்டமாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும், இரண்டாம் கட்டமாக செப்டம்பர் 14-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டமும், மூன்றாவது கட்டமாக உயர்நிலை, மேல்நிலைக் கல்வி ஆசிரியர்களை ஒருங்கிணைத்துக் கூட்டுப் போராட்டமும் நடத்தப்படும் என தமிழக ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் இல்லத்துக்கு சென்று வாக்கு சேகரிப்பு

தோ்தல் வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றவில்லை! - நயினாா் நாகேந்திரன் பிரசாரம்
தினப்பலன்கள் - தனுசு
தினப்பலன்கள் - மிதுனம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

