அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு புதிய சி.டி. ஸ்கேன்

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுக்கு புதிய சி.டி. ஸ்கேன் கருவி வாங்குவதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Updated On :2 ஆகஸ்ட் 2013, 4:44 am IST

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுக்கு புதிய சி.டி. ஸ்கேன் கருவி வாங்குவதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சுமார் மூன்றரை கோடி மதிப்புள்ள இந்த கருவி இறக்குமதி செய்யப்பட்டு இன்னும் ஒரு மாதத்துக்குள் அரசு மருத்துவமனை சிகிச்சைப் பிரிவில் நிறுவப்படவுள்ளது.

முற்றிய நிலையில் காணப்படும் புற்றுநோய் கட்டிகளையும், அறுவை சிகிச்சை செய்யமுடியாத சிக்கலான பகுதிகளிலும் சிகிச்சை அளிக்க இந்தக் கருவி பயன்படும். ஒரே நேரத்தில் ஸ்கேன் செய்துகொண்டே, பாதிப்பு உள்ள இடங்களில் கதிர்வீச்சை செ லுத்தி சிகிச்சை அளிக்கவும் முடியும்.

கதிர்வீச்சை செலுத்தி சிகிச்சை செய்யும்போது அந்த கதிர்வீச்சு செல்லும் பாதைகளில் உள்ள நல்ல செல்களுக்கும் பாதிப்பு ஏற்படும். ஆனால் இந்தக் கருவியின் மூலம் பாதிப்புள்ள இடங்களை துல்லியமாக கண்டறிந்து அவற்றை அழிக்க முடியும்.

இது குறித்து சென்னை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் கனகசபை கூறுகையில்,""ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் இந்தக் கருவியை நிறுவுவதன் மூலம் பாதிப்புள்ள இடங்கள் துல்லியமாகக் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படும்'' என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.