/

கடை கதவை உடைத்து பணம் திருட்டு

சென்னை சூளைமேட்டில் கடை கதவை உடைத்து பணம் திருடப்பட்டது.

Updated On :1 ஆகஸ்ட் 2013, 11:07 pm

சென்னை சூளைமேட்டில் கடை கதவை உடைத்து பணம் திருடப்பட்டது.

சூளைமேடு செந்தில்நகரைச் சேர்ந்தவர் இலியாஸ் (31). இவர் 100 அடி சாலையில் ஒரு ஸ்டேஷ்னரி கடை நடத்தி வருகிறார்.

இலியாஸ் புதன்கிழமை இரவு வழக்கம்போல கடையை பூட்டவிட்டு வீட்டுக்குச் சென்றார். வியாழக்கிழமை காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, அங்கிருந்த ரூ. 40 ஆயிரம் திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவர், சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.