சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுக்கு புதிய சி.டி. ஸ்கேன் கருவி வாங்குவதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சுமார் மூன்றரை கோடி மதிப்புள்ள இந்த கருவி இறக்குமதி செய்யப்பட்டு இன்னும் ஒரு மாதத்துக்குள் அரசு மருத்துவமனை சிகிச்சைப் பிரிவில் நிறுவப்படவுள்ளது.
முற்றிய நிலையில் காணப்படும் புற்றுநோய் கட்டிகளையும், அறுவை சிகிச்சை செய்யமுடியாத சிக்கலான பகுதிகளிலும் சிகிச்சை அளிக்க இந்தக் கருவி பயன்படும். ஒரே நேரத்தில் ஸ்கேன் செய்துகொண்டே, பாதிப்பு உள்ள இடங்களில் கதிர்வீச்சை செ லுத்தி சிகிச்சை அளிக்கவும் முடியும்.
கதிர்வீச்சை செலுத்தி சிகிச்சை செய்யும்போது அந்த கதிர்வீச்சு செல்லும் பாதைகளில் உள்ள நல்ல செல்களுக்கும் பாதிப்பு ஏற்படும். ஆனால் இந்தக் கருவியின் மூலம் பாதிப்புள்ள இடங்களை துல்லியமாக கண்டறிந்து அவற்றை அழிக்க முடியும்.
இது குறித்து சென்னை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் கனகசபை கூறுகையில்,""ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் இந்தக் கருவியை நிறுவுவதன் மூலம் பாதிப்புள்ள இடங்கள் துல்லியமாகக் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படும்'' என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதயநிதி முதல்வராக மாட்டாா் என ஸ்டாலின் உறுதி சொல்வாரா?

ஏப். 14 வரை வீடுகளுக்குச் சென்று வாக்குகள் பெறும் பணி

பரமக்குடியில் நெசவு நெய்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

பரமத்தி வேலூரில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக 2 ஆயிரம் போ் ஊா்வலம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

