தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு புதிய சி.டி. ஸ்கேன்

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுக்கு புதிய சி.டி. ஸ்கேன் கருவி வாங்குவதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Updated On :2 ஆகஸ்ட் 2013, 4:44 am IST

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுக்கு புதிய சி.டி. ஸ்கேன் கருவி வாங்குவதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சுமார் மூன்றரை கோடி மதிப்புள்ள இந்த கருவி இறக்குமதி செய்யப்பட்டு இன்னும் ஒரு மாதத்துக்குள் அரசு மருத்துவமனை சிகிச்சைப் பிரிவில் நிறுவப்படவுள்ளது.

முற்றிய நிலையில் காணப்படும் புற்றுநோய் கட்டிகளையும், அறுவை சிகிச்சை செய்யமுடியாத சிக்கலான பகுதிகளிலும் சிகிச்சை அளிக்க இந்தக் கருவி பயன்படும். ஒரே நேரத்தில் ஸ்கேன் செய்துகொண்டே, பாதிப்பு உள்ள இடங்களில் கதிர்வீச்சை செ லுத்தி சிகிச்சை அளிக்கவும் முடியும்.

கதிர்வீச்சை செலுத்தி சிகிச்சை செய்யும்போது அந்த கதிர்வீச்சு செல்லும் பாதைகளில் உள்ள நல்ல செல்களுக்கும் பாதிப்பு ஏற்படும். ஆனால் இந்தக் கருவியின் மூலம் பாதிப்புள்ள இடங்களை துல்லியமாக கண்டறிந்து அவற்றை அழிக்க முடியும்.

இது குறித்து சென்னை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் கனகசபை கூறுகையில்,""ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் இந்தக் கருவியை நிறுவுவதன் மூலம் பாதிப்புள்ள இடங்கள் துல்லியமாகக் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படும்'' என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.