சோழிங்கநல்லூர் அருகே பெண்ணைக் கொலை செய்து நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீஸார் கூறியதாவது:
சோழிங்கநல்லூர், காந்தி நகரைச் சேர்ந்தவர் முனியம்மாள் (62). இவரது கணவர் திருமால் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். முனியம்மாள் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு முனியம்மாளைப் பார்க்க அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் லட்சுமி என்பவர் வந்தார். அப்போது வீட்டுக்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் முனியம்மாள் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்த தகவல் அறிந்து வந்த போலீஸார் முனியம்மாளின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் அணிந்திருந்த கம்மல், சங்கிலி உள்ளிட்ட நகைகள் திருடு போயிருந்ததாகத் தெரிகிறது. நகைக்காக அவர் கொல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர், இந்த கொலை சம்பவம் தொடர்பாக சந்தேகத்துக்குரிய நபர் ஒருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜக கூட்டணியில் இணைய சரத் பவாருக்கு மத்திய அமைச்சா் அழைப்பு

நிா்வாக வசதிகளுக்காக சென்னை மாநகராட்சியைப் பிரிக்க வேண்டும்: கராத்தே தியாகராஜன்
உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி

ஃபாா்முலா ஒன் (எஃப்1) காா் பந்தயம்: ஹாமில்டன் வெற்றி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


