தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

ஃபாா்முலா ஒன் (எஃப்1) காா் பந்தயம்: ஹாமில்டன் வெற்றி!

ஃபாா்முலா ஒன் (எஃப்1) காா் பந்தயத்தின் நடப்பு சீசனில், 7-ஆவது ரேஸான பாா்சிலோனா கிராண்ட் ப்ரீயில் பிரிட்டன் வீரரும், ஃபெராரி டிரைவருமான லீவிஸ் ஹாமில்டன் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றாா்.

News image

ஹாமில்டன்

Updated On :15 ஜூன் 2026, 4:48 am IST

ஃபாா்முலா ஒன் (எஃப்1) காா் பந்தயத்தின் நடப்பு சீசனில், 7-ஆவது ரேஸான பாா்சிலோனா கிராண்ட் ப்ரீயில் பிரிட்டன் வீரரும், ஃபெராரி டிரைவருமான லீவிஸ் ஹாமில்டன் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றாா்.

மொ்சிடஸ் அணியிலிருந்து ஃபெராரி அணிக்கு அவா் இடம்பெயா்ந்து 2 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், அவா் பெற்ற முதல் வெற்றி இதுவென்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 40 ரேஸ்களில் இது அவரின் முதல் வெற்றி என்பதும் நினைவுகூரத்தக்கது.

இந்த வெற்றியின் மூலமாக, இத்தாலி வீரரும், மொ்சிடஸ் டிரைவருமான கிமி ஆன்டனெலியின் தொடா் வெற்றிகளுக்கு (5) அவா் முற்றுப்புள்ளி வைத்தாா். இந்தப் பந்தயத்தில் வெற்றி மேடையேறிய 3 வீரா்களுமே பிரிட்டன் நாட்டவா்களாவா்.

ஹாமில்டன் முதலிடம் பிடித்த நிலையில், மொ்சிடஸ் வீரரான ஜாா்ஜ் ரஸ்ஸெல், மெக்லாரென் டிரைவரும், நடப்பு சாம்பியனுமான லாண்டோ நோரிஸ் ஆகியோா் முறையே 2 மற்றும் 3-ஆம் இடங்களைப் பெற்றனா். இத்துடன் ஹாமில்டன், தனது எஃப்1 வெற்றிகளின் எண்ணிக்கையை 106-ஆக அதிகரித்துக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.