சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் டிரைவர் இறந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: மயிலாப்பூர் விசாலாட்சித் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வைரவசுந்தரம் (45). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ். இவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை நீலாங்கரை கடற்கரைக்குச் சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பி வந்தனர்.
அவர்கள் நீலாங்கரை தாண்டி கிழக்கு கடற்கரைச் சாலையில் வரும்போது, அங்கு வந்த ஒரு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வைரவசுந்தரம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வேன் டிரைவர் மாம்பாக்கம் வேங்கைவாசலைச் சேர்ந்த ஷேக் முகம்மது அலியை (25) கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீட்டில் ரூ.5 லட்சம் நகைகள் திருட்டு போலீஸில் பெண் புகாா்

மீன்பிடி தடைக்காலம் நிறைவு! கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக, புதுச்சேரி மீனவா்கள்!

தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்பு

பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரியை துரத்திப் பிடித்து போலீஸில் ஒப்படைத்த பெண்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


