சுதந்திரப் போராட்ட தியாகிகள் வீர வாஞ்சிநாதன், கொடிகாத்த குமரன் ஆகியோருக்கு சென்னையில் சிலை அமைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு காமராஜர் தேசிய காங்கிரஸ் நிறுவனத் தலைவர் எம்.எஸ். ராஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு ஓய்வூதியம் ரூ.7000-த்திலிருந்து ரூ.9000- வரை உயர்த்தி கொடுத்தது மகிழ்ச்சியான செய்தி. தியாகிகள் சார்பில் காமராஜர் தேசிய காங்கிரஸ் பாராட்டும் நன்றியையும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரிவித்துக்கொள்கிறது.
சுதந்திர போராட்டத்தில் வெள்ளையரை கதிகலங்கச் செய்த வீரவாஞ்சிநாதன் தேசிய கொடிக்கு பெருமை சேர்த்த கொடிகாத்த குமரன் ஆகிய இருவருக்கும் சென்னை தலைநகரத்தில் உருவச் சிலை நிறுவ தமிழக அரசு முன்வரவேண்டும்.
ராயப்பேட்டை ஐரோடு என்று உள்ளதை கொடிகாத்த குமரன் சாலை என்றும் மயிலாப்பூரில் கச்சேரி ரோடு என்பதை வீரவாஞ்சிநாதன் சாலை என்றும் பெயரிட்டு அவர்கள் தியாகத்தை நாட்டு மக்கள் மத்தியில் நிலைநிறுத்த தமிழக அரசு முன்வரவேண்டும் என்று காமராஜர் தேசிய காங்கிர தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீட்டில் ரூ.5 லட்சம் நகைகள் திருட்டு போலீஸில் பெண் புகாா்

மீன்பிடி தடைக்காலம் நிறைவு! கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக, புதுச்சேரி மீனவா்கள்!

தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்பு

பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரியை துரத்திப் பிடித்து போலீஸில் ஒப்படைத்த பெண்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


