சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

இரு அஞ்சல் அலுவலகங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்று

சென்னையில் உள்ள அண்ணா சாலை மற்றும் மயிலாப்பூர் தலைமை அஞ்சல் அலுவலகங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்று கிடைத்துள்ளது.

Updated On :11 செப்டம்பர் 2013, 10:21 pm

சென்னையில் உள்ள அண்ணா சாலை மற்றும் மயிலாப்பூர் தலைமை அஞ்சல் அலுவலகங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்று கிடைத்துள்ளது.

இரு அஞ்சல் அலுவலகங்களுக்கும் இந்திய தர நிர்ணய அமைப்பு (பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ்) வழங்கியுள்ள ஐ.எஸ் 15700:2005 என்ற தரச் சான்றிதழ், அடுத்த 3 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். இது குறித்து அஞ்சல்துறைத் தலைவர் (சென்னை) வெளியிட்ட செய்தி: அண்ணா சாலை மற்றும் மயிலாப்பூர் தலைமை அஞ்சல் அலுவலகங்களின் விரைவு அஞ்சல், எக்ஸ்பிரஸ் பார்சல், சேமிப்புத் திட்டங்கள், மணி ஆர்டர் சேவை, பார்சல்கள் முன்பதிவு உள்ளிட்ட சேவைகளின் தரம் சிறப்பாக உள்ளன.

அதன் அடிப்படையில் இரு அஞ்சல் அலுவலகங்களுக்கும் ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.