சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

சாலை விபத்து: டெய்லர் சாவு

சென்னை அம்பத்தூரில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் டெய்லர் இறந்தார்.

Updated On :11 செப்டம்பர் 2013, 10:20 pm

சென்னை அம்பத்தூரில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் டெய்லர் இறந்தார்.

அம்பத்தூர் இந்திரா நகர் காமராஜர் தெருவில் வசித்தவர் சுப்பிரமணி (40). தையல் தொழிலாளியான இவர் அண்ணா நகரில் துணி தைத்து கொடுத்து வந்தார்.

வழக்கம் போல் செவ்வாய்க்கிழமை இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.

பாடி மேம்பாலம் இறக்கத்தில் சென்றபோது மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி தடுப்புச் சுவரின் மீது மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.