சென்னை அம்பத்தூரில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் டெய்லர் இறந்தார்.
அம்பத்தூர் இந்திரா நகர் காமராஜர் தெருவில் வசித்தவர் சுப்பிரமணி (40). தையல் தொழிலாளியான இவர் அண்ணா நகரில் துணி தைத்து கொடுத்து வந்தார்.
வழக்கம் போல் செவ்வாய்க்கிழமை இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.
பாடி மேம்பாலம் இறக்கத்தில் சென்றபோது மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி தடுப்புச் சுவரின் மீது மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாரதிராஜாவுக்கு என்னைப் பிடிக்கும்; என் நடிப்பு பிடிக்காது! ரஜினிகாந்த் பேட்டி

இறுதி அத்தியாயத்தை நோக்கி மகாநதி தொடர்! விரைவில் நிறைவடைகிறது!

சிவகார்த்திகேயனின் சேயோன் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!
லஷ்மிகாந்தன் கொலை வழக்கு: முதல் பாடல்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


