விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள துப்புரவுப் பணியாளர்களுக்கும் மற்ற பணியாளர்களுக்கு வழங்கப்படுவது போன்ற ஊதியம் வழங்கவேண்டும் என்று துப்புரவுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டம் சென்னை மாநகராட்சி தலைமையகமான ரிப்பன் கட்டட வளாகத்தில் புதன்கிழமை காலை நடைபெற்றது.
இதில் சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தைச் சேர்ந்த சுமார் 600-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
அப்போது, மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் பணிபுரியும் என்.எம்.ஆர்., தாற்காலிக, தொகுப்பூதிய தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யவேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் குடியிருப்பு வசதி, தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டையை வழங்க வேண்டும்; பழைய மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது போன்ற ஊதியத்தை விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள தொழிலாளர்களுக்கும் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாரதிராஜாவுக்கு என்னைப் பிடிக்கும்; என் நடிப்பு பிடிக்காது! ரஜினிகாந்த் பேட்டி

இறுதி அத்தியாயத்தை நோக்கி மகாநதி தொடர்! விரைவில் நிறைவடைகிறது!

சிவகார்த்திகேயனின் சேயோன் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!
லஷ்மிகாந்தன் கொலை வழக்கு: முதல் பாடல்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



