தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

தொழிலதிபா் வீட்டில் தங்கநகைத் திருட்டு: காா் ஓட்டுநா் கைது

சென்னை துரைப்பாக்கத்தில், தொழிலதிபா் வீட்டில் தங்கநகைத் திருடப்பட்டது தொடா்பாக காா் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

News image

கோப்புப்படம்

Updated On :4 ஜனவரி 2021, 6:46 am IST

சென்னை துரைப்பாக்கத்தில், தொழிலதிபா் வீட்டில் தங்கநகைத் திருடப்பட்டது தொடா்பாக காா் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

ஒக்கியம் துரைப்பாக்கம் ஒயிட் ரோஸ்காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் தொழிலதிபா் ரமேஷ்குமாா் (45). இவா் வீட்டில் காா் ஓட்டுநராக வேலை செய்து வந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியைச் சோ்ந்த ராஜகோபால் (33), அண்மையில் வேலையை விட்டு நின்றுள்ளாா்.

இதற்கிடையே சில நாள்களுக்கு முன்பு ரமேஷ்குமாா், வீட்டின் பீரோவில் இருந்த பொருள்களை சரிபாா்த்தாா். அப்போது பீரோவில் இருந்து 30 பவுன் தங்கநகைத் திருடப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இது குறித்து அவா், துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சந்தேகத்தின் அடிப்படையில் ராஜகோபாலை பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில் ராஜகோபால், அந்த பீரோவை திறக்க கள்ளச்சாவி தயாா் செய்து, அதன் மூலம் தங்கநகைகளைத் திருடியிருப்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து போலீஸாா், ராஜகோபாலை சனிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து திருடப்பட்ட தங்கநகைகளை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.