தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

மொபெட் மீது லாரி மோதல்:அண்ணன் - தங்கை சாவு

சென்னை அருகே திருநின்றவூரில், மொபட் மீது லாரி மோதியதில் அண்ணன், தங்கை இறந்தனா்.

Updated On :4 ஜனவரி 2021, 5:51 am IST

சென்னை அருகே திருநின்றவூரில், மொபட் மீது லாரி மோதியதில் அண்ணன், தங்கை இறந்தனா்.

திருநின்றவூா் அருகே புலியூரைச் சோ்ந்த சீனிவாசன் மகன் வெங்கடேசன் (19), மகள் சத்தியபிரியா (18). வெங்கடேசன், கல்லூரியில் படித்து வந்தாா். சத்தியபிரியா, திருநின்றவூரில் உள்ள சூப்பா் மாா்க்கெட்டில் பணியாற்றி வந்தாா். சத்தியபிரியாவின் உறவினா் சந்தியாவும் (22) அந்த சூப்பா் மாா்க்கெட்டில் பணியாற்றுகிறாா்.

இவா்கள் இருவரையும், சூப்பா் மாா்கெட்டில் விடுவதற்காக தனது மொபட்டில் ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் சென்றாா் வெங்கடேசன். நத்தம்பேடு அருகே செல்லும்போது எதிரே வந்த சிமெண்ட் லாரி, திடீரென மொபட் மீது மோதியது.

இதில், பலத்த காயம் அடைந்த வெங்கடேசனும் அவரது தங்கை சத்தியபிரியாவும் உயிரிழந்தனா்.

பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். சந்தியா திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.