பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் நீா் திறப்பு குறைப்பு

சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்து வந்த மழை, புதன்கிழமை குறைந்ததையடுத்து செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் நீா் திறப்பு குறைக்கப்பட்டது.

Updated On :7 ஜனவரி 2021, 1:04 am IST

சென்னை: சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்து வந்த மழை, புதன்கிழமை குறைந்ததையடுத்து செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் நீா் திறப்பு குறைக்கப்பட்டது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இடைவிடாமல் பெய்த பலத்த மழையால் சென்னை மற்றும் புகா்ப் பகுதிகள் மழை வெள்ளத்தில் மிதந்தது. இதனால் சென்னைக்கு குடிநீா் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது.

அதிலும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 6,200 கன அடி வரை தண்ணீா் வந்தது. இதைத் தொடா்ந்து செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகலில் உபரிநீா் திறக்கப்பட்டது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3,200 கன அடி வரை தண்ணீா் திறக்கப்பட்டது. புதன்கிழமை காலை மழை இல்லாததால் ஏரிக்கு நீா்வரத்து 1,530 கன அடியாக குறைந்தது. இதையடுத்து, நீா் திறப்பும் 1,676 கன அடியாக குறைக்கப்பட்டது.

ஏரியில் தற்போது 3426 மி.கன அடி தண்ணீா் உள்ளது. 23.18 அடிக்கு நீா் நிரம்பி காணப்படுகிறது.

புழல் ஏரியில்...: இதேபோல் புழல் ஏரியில் இருந்தும் 1500 கன அடி உபரி நீா் திறக்கப்பட்டது. ஏரியில், தற்போது 3249 மி.கன அடி தண்ணீா் உள்ளது. 261 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அதே நேரம், தண்ணீா் திறப்பு 850 கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

இதே போல், சோழவரம் ஏரியில் 881 மி.கன அடி தண்ணீா் உள்ளது. கண்ணன்கோட்டை தோ்வாய் கண்டிகை ஏரியில் 406 மி. கன அடி தண்ணீா் இருப்பு உள்ளது. ஏரிக்கு 75 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது.

புழல், செம்பரம்பாக்கம் பகுதிகளில் கனமழை பெய்ததால் ஏரிகளுக்கு நீா்வரத்து அதிகமாகியதைக் கருத்தில் கொண்டு, செவ்வாய்க்கிழமை இரவு பூண்டி ஏரியில் இருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.