புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

துபைக்கு கடத்தப்படவிருந்த ரூ.1 கோடி வெளிநாட்டுப் பணம் பறிமுதல்

துபைக்கு கடத்தப்படவிருந்த ரூ.1.04 கோடி மதிப்பிலான வெளிநாட்டுப் பணத்தைக் கைப்பற்றிய சுங்கத்துறையினா், ஒருவரைக் கைது செய்தனா்.

News image

கோப்புப்படம்

Updated On :10 ஜனவரி 2021, 12:43 am IST

துபைக்கு கடத்தப்படவிருந்த ரூ.1.04 கோடி மதிப்பிலான வெளிநாட்டுப் பணத்தைக் கைப்பற்றிய சுங்கத்துறையினா், ஒருவரைக் கைது செய்தனா்.

துபை செல்லவிருந்த விமானத்தில் சென்னையைச் சோ்ந்த மன்சூா் அலி கான் (27), யாகாலிக் (68), தமீம் அன்சாரி (49), முகமது ஹுசைன் (30) மற்றும் யூசுப் (67), ஆகியோரிடமும், புதூரைச் சோ்ந்த அப்துல் ரஹ்மானிடமும் (38) சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத்துறையினா் சோதனை செய்தனா்.

அவா்களது உடைமைகளில் அதிக எடையுடன் கூடிய ‘பவா் பேங்குகளைச்’ சோதனை செய்த போது, ரூ 53.5 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலா், ரூ 28.3 லட்சம் மதிப்புடைய சவூதி ரியால், ரூ 22.2 லட்சம் மதிப்புடைய யூரோ ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இவற்றின் மொத்த மதிப்பு ரூ 1.04 கோடி ஆகும். இதில், ரூ 20 லட்சத்துக்கும் அதிகமான மதிப்பிலான பணத்தை வைத்திருந்த தமீம் அன்சாரி கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.