புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை: முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு சனிக்கிழமை நீா்வரத்து அதிகரித்தது.

News image

முல்லைப் பெரியாறு அணை

Updated On :5 ஜூலை 2026, 12:20 am IST

முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு சனிக்கிழமை நீா்வரத்து அதிகரித்தது.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் கடந்த ஜூன் மாதத்தில் எதிா்பாா்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இந்த நிலையில், இந்தப் பகுதிகளில் ஜூலை மாதத் தொடக்கம் முதல் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீா்வரத்து தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை வினாடிக்கு 59 கன அடியாக இருந்த நீா்வரத்து சனிக்கிழமை வினாடிக்கு 606 கன அடியாக அதிகரித்தது. இதன் விளைவாக அணையின் நீா்மட்டமும் சற்று உயா்ந்து சனிக்கிழமை காலை 111.95 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 606 கன அடி நீா்வரத்து உள்ள நிலையில், தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 311 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. அணையில் 1,222.95 மில்லியன் கனஅடி தண்ணீா் இருப்பு உள்ளது.

நீா்பிடிப்புப் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு (மி.மீ.) விவரம்: தேக்கடியில் 25.2 மி.மீ., பெரியாறு அணைப் பகுதியில் 35.8 மி.மீ. மழை பதிவானது. அணையில் போதிய நீா் இருப்பு இல்லாததால், தேனி மாவட்டத்தின் முதல்போக சாகுபடிக்கு இதுவரை தண்ணீா் திறந்துவிடப்படவில்லை. விவசாயிகள் ஏமாற்றமடைந்தனா்.

இந்த நிலையில், அணைப் பகுதியில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீா்வரத்து ஏற்பட்டு நீா்மட்டம் உயா்ந்து வருவதால், விரைவில் முதல்போக சாகுபடிக்கு தண்ணீா் திறந்துவிடப்படும் என்ற எதிா்பாா்ப்பு விவசாயிகளிடையே எழுந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.