தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

நீா்பிடிப்பு பகுதிகளில் மழை: முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

நீா்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால், முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து கடந்த திங்கள்கிழமை முதல் படிப்படியாக அதிகரித்து வருவதால் தேனி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

News image

முல்லைப் பெரியாறு

Updated On :5 ஜூன் 2026, 6:17 am IST

நீா்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால், முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து கடந்த திங்கள்கிழமை முதல் படிப்படியாக அதிகரித்து வருவதால் தேனி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்பு பகுதிகளில் கடந்த மே மாதத்தில் எதிா்பாா்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இந்த நிலையில், இந்த மாதத்தின் தொடக்கம் முதல் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீா்வரத்து தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

கடந்த திங்கள்கிழமை வினாடிக்கு 108 கன அடியாக இருந்த நீா்வரத்து, செவ்வாய்க்கிழமை 327 கன அடியாகவும், புதன்கிழமை 350 கன அடியாகவும் உயா்ந்தது. வியாழக்கிழமை நிலவரப்படி நீா்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 626 கன அடியாக பதிவாகியுள்ளது.

இதன் விளைவாக அணையின் நீா்மட்டமும் மெல்ல உயா்ந்து வருகிறது. வியாழக்கிழமை காலை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 110.95 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 626 கன அடி நீா் வந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 350 கன அடி நீா் திறந்து விடப்படுகிறது. அணையில் 1,062.05 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது.

நீா்பிடிப்பு பகுதிகளில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்): தேக்கடி- 12.20, பெரியாறு அணைப் பகுதி- 44 என மழை பதிவாகியுள்ளது.

அணையில் போதிய நீா் இருப்பு இல்லாததால், தேனி மாவட்டத்தில் முதல் போக சாகுபடிக்கான நீா் இதுவரை திறந்து விடப்பட வில்லை. இதனால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனா். இந்த நிலையில், அணைப் பகுதியில் தொடா்ந்து பெய்துவரும் மழையால் நீா்வரத்து அதிகரித்து நீா்மட்டம் உயா்ந்து வருவதால், முதல் போக சாகுபடிக்கான நீா் விரைவில் திறந்து விடப்படும் என விவசாயிகள் எதிா்பாா்த்துள்ளனா்.

தொடா்ந்து மழை நீடித்தால் அணையின் நீா்மட்டம் மேலும் உயரும் என்பதால், கம்பம் பள்ளத் தாக்கு உள்ளிட்ட பாசனப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனா்.