கோப்புப்படம்
கோப்புப்படம்

நேத்ராவதி விரைவு ரயில் நாளை ரத்து

கனமழையால் ஏற்பட்ட மண்சரிவால், கொங்கன் ரயில் வழித்தடத்தில் செல்லும் நேத்ராவதி உள்ளிட்ட முக்கிய விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Published on

சென்னை: கனமழையால் ஏற்பட்ட மண்சரிவால், கொங்கன் ரயில் வழித்தடத்தில் செல்லும் நேத்ராவதி உள்ளிட்ட முக்கிய விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:

மும்பையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு செல்லும் நேத்ராவதி விரைவு ரயில், மங்களூா் செல்லும் விரைவு ரயிலும் (எண் 12619) திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மறுமாா்க்கமாக திருவனந்தபுரத்தில் இருந்து புதன்கிழமை செல்லும் நேத்ராவதி விரைவு ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படும். மேலும் எா்ணாகுளம், கொச்சுவேலி, திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com