அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

மாஸ்டர்: ரசிகர்களின் ஆரவாரம், விசில்களை ரசித்த இயக்குநர் மிஷ்கின்

உதவி இயக்குநர்களுடன் இணைந்து மாஸ்டர் படத்தைப் பார்த்தேன். ரசிகர்களின் ஆரவாரம், விசில்களை ரசித்தேன்.

News image
Updated On :14 ஜனவரி 2021, 1:36 pm IST

தனது உதவி இயக்குநர்களுடன் இணைந்து விஜய் நடித்த மாஸ்டர் படத்தைத் திரையரங்கில் கண்டு ரசித்துள்ளார் பிரபல இயக்குநர் மிஷ்கின்.

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் விஜய். இசை - அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக இயங்கவில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் நேற்று வெளியானது. 

இந்நிலையில் தனது உதவி இயக்குநர்களுடன் இணைந்து மாஸ்டர் படத்தைத் திரையரங்கில் பார்த்த பிரபல இயக்குநர் மிஷ்கின், ட்விட்டரில் படம் பற்றி தெரிவித்ததாவது:

உதவி இயக்குநர்களுடன் இணைந்து மாஸ்டர் படத்தைப் பார்த்தேன். ரசிகர்களின் ஆரவாரம், விசில்களை ரசித்தேன். விஜய் அழகாகவும் ஸ்டைலாகவும் உள்ளார். விஜய் சேதுபதி மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.