அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

’மதகஜராஜா’ படத்தை வாங்கிய விஷால்

இதன்பிறகு சுந்தர்.சி இயக்கிய தீயா வேலை செய்யணும் குமாரு படம் திரைக்கு வந்துவிட்டது. இதனால் காத்திருந்து வெறுத்துப் போன விஷால் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2013, 2:49 pm IST

‘ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்’ தயாரிப்பில், சுந்தர்.சி இயக்கியிருக்கும் படம் ’மதகஜராஜா’. இந்தப் படத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

விஜய் ஆன்டனி இசை அமைத்திருக்கிறார். சுந்தர்.சி இயக்கும் படங்கள் என்றாலே அதில் காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும். அதுமாதிரி ‘மதகஜராஜா’வும் கலகலப்பான காமெடி படமாக அமைந்திருக்கிறதாம். மதகஜராஜா திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே ரிலீசாக இருந்தது.

ஆனால் நிதி நெருக்கடி காரணமாக படம் ரிலீஸாகாமல் தொடர்ந்து தள்ளிப் போனது. இதன்பிறகு சுந்தர்.சி இயக்கிய தீயா வேலை செய்யணும் குமாரு படம் திரைக்கு வந்துவிட்டது. இதனால் காத்திருந்து வெறுத்துப் போன விஷால் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்.

அதாவது படத்தை தானே வாங்கி விஷால் ஃபிலிம் பேக்டரி மூலம் வெளியிட இருக்கிறார். இதையடுத்து ’மதகஜராஜா’ படம் அடுத்த மாதம் 6ம் ரிலீஸாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.