பருத்தி வீரன் படத்துக்குப் பிறகு நடிகர் கார்த்தி மீண்டும் கிராமத்து வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.
அறிமுகமான முதல் படத்திலேயே தமிழ் திரையுலகை தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர்தான் கார்த்தி. அப்படியொரு வெற்றியை தேடி தந்த படம்தான் பருத்திவீரன். இப்படம் கிரமாத்தின் பின்னணியில் எடுக்கப்பட்டடிருந்தது. அதன்பிறகு என்னவோ கார்த்தி நடித்த ஒருசில படங்கள் தவிர மற்ற படங்கள் அவ்வளவாக போகவில்லை.
சொல்லப்போனால் பருத்திவீரன் படத்தை தொடர்ந்து இவர் நடித்த படங்கள் அனைத்தும் நகரத்தின் பின்னணியில் அமைந்திருந்தன. கிராமத்து வேடத்தில் கிடைத்த வரவேற்பு போல் இந்த கதாபாத்திரங்களுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் கிராமத்து வேடங்களை ஏற்கும்படி அவரது விசுவாசிகள் அட்வைஸ் சொன்னார்களாம்.
அந்த சமயத்தில்தான் அட்டகத்தி இயக்குனர் ரஞ்சித், கார்த்தியிடம் கதை ஒன்றை சொல்லியிருக்கிறார். அந்தக் கதை கிராமத்து பின்னணியில் அமைக்கப்பட்டிருந்தால் உடனே ஓகே சொல்லிவிட்டாராம் கார்த்தி. இதுபற்றி இயக்குனர் கூறும்போது, பருத்தி வீரன்போல் இப்படமும் வறட்சியான கிராமத்து பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கிறது. கார்த்திக்கு இது வித்தியாசமான படமாக அமையும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









