

பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்கி வந்த கே.எஸ். ரவிக்குமார் விரைவில் தன்னுடைய புதிய படத்தைத் தொடங்கவுள்ளார்.
நான் ஈ புகழ் சுதீப் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் நித்யா மேனனும் நடிக்கிறார். தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் உருவாகிறது.
இதுபற்றி சுதீப் கூறும்போது, கே.எஸ். ரவிக்குமாரின் சமீபத்திய படங்கள் சரியாகப் போகாததால் அவருடைய திறமை குறைந்துவிடாது. இந்தப் படம் கமர்ஷியல்தன்மை கொண்டது. இதுபோன்ற படங்களை எடுப்பதில் அவர் திறமைசாலி என்றார்.
ஆகஸ்ட் 10-ம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.