கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

தோழியுடன் ஆண் நண்பர் எரித்துக் கொலை! பிரபல நடிகையின் சகோதரி கைது

பிரபல நடிகையின் சகோதரி இரட்டைக் கொலை வழக்கில் கைது!

சகோதரி அலியா ஃபக்ரியுடன்(வலது) நர்கிஸ் ஃபக்ரி - நர்கிஸ் ஃபக்ரி சமூக வலைதளப் பதிவு

Published On :

பாலிவுட் ரசிகர்களிடம் தனி இடத்தைப் பிடித்துள்ள நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் சகோதரியான அலியா ஃபக்ரி(43) இரட்டைக் கொலை வழக்கில் நியூயார்க்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

அலியா ஃபக்ரிக்கும்(43) அவருடைய ஆண் நண்பர் எட்வார்டு ஜேக்கப்ஸ்க்கும் இடையே கடந்த சில காலமாக உறவில் விரிசல் போக்கு நிலவி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஓராண்டாக அவர்கள் இருவரும் பிரிந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், எட்வார்டு ஜேக்கப்ஸின்(35) தோழி அனஸ்டாசியா எட்டென்(33) என்பவருடன் ஜேக்கப்ஸ் நட்புறவில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை கண்டித்துள்ள அலியா ஃபக்ரி ஜேக்கப்ஸை தன்னுடன் இணைந்து வாழ வற்புறுத்தியுள்ளார். இதற்கு ஜேக்கப்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நியூயார்க்கின் குயின்ஸ் மாவட்டத்தில் தனது தோழியுடன் ஒரு வீட்டில் வசித்து வந்த ஜேக்கப்ஸ் வீட்டுக்கு கடந்த மாதம் 23-ஆம் தேதி அதிகாலை வேளையில் சென்ற அலியா ஃபக்ரி, அந்த வீட்டை தீ வைத்து கொளுத்தியுள்ளார். அதில், வீட்டில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அவரது நண்பர் எட்வார்டு ஜேக்கப்ஸ்(35) தீயினால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் அந்த வீட்டிலிருந்த எட்வார்டு ஜேக்கப்ஸின் தோழி அனஸ்டாசியா எட்டென் என்பவரும் தீயில் சிக்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இரட்டைக் கொலை வழக்கில் அலியா ஃபக்ரி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை இம்மாதம் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. அலியா ஃபக்ரி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுமென்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.