இயக்குநர் ஆர்கே வித்யாதரன் இயக்கத்தில் உருவாகும் ஸ்கூல் என்ற திரைப்படத்தில் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகிபாபு, இயக்குநர் மற்றும் நடிகரான கே.எஸ்.ரவிக்குமார் இணைந்து நடிக்கின்றனர்.
ஆர்கே வித்யாதரனின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. இதில் பூமிகா சாவ்லா கதாநாயகியாக நடிக்கிறார்.
ஒரு பள்ளிக்கூடத்தை கதைக்களமாக வைத்து, சைக்காலஜிக்கல் திரில்லராக இந்தப் படம் உருவாக்கபடுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அந்தப் பள்ளியில் நடக்கும் குற்றங்களே கதையின் மையமாக இருக்கும் எனக் கூறியுள்ளனர்.
இதையும் படிக்க: மிஷ்கின் எழுதி, இசையமைத்த பெருந்திணை பாடல் விடியோ!
யோகி பாபு, மற்றும் பூமிகா சாவ்லா அந்தப் பள்ளியின் ஆசிரியர்களாக நடிக்கவுள்ளனர். பகவதி பெருமாள் மற்றும் சாம்ஸ் பள்ளி தலைமை ஆசிரியர்களாக நடிக்கின்றனர். பள்ளியில் நடக்கும் குற்றங்களை விசாரணை செய்யும் காவல்துறை அதிகாரியாக கே.எஸ். ரவிக்குமார் நடிக்கவுள்ளார்.
இந்தத் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஆதித்யா கோவிந்தராஜ் மற்றும் எடிட்டராக ராகவ் ஏஆர்எஸ் பணியாற்றுகின்றனர். ஆர்.கே. வித்யாதரன் மற்றும் கே. மஞ்சு இணைந்து குவாண்டம் ஃபில்ம் ஃபேக்கடரி (Quantum film factory) என்ற பெயரில் இந்தத் திரைப்படத்தை தயாரிக்கின்றனர்.