24,300 புள்ளிகளை கடந்த நிஃப்டி, சென்செக்ஸ் 965 புள்ளிகள் உயர்வு!!சென்னையில் வெளுத்து வாங்கும் பலத்த மழை! எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்! கால நீட்டிப்பு இல்லை! அமெரிக்காவுக்குப் பதிலடி! வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவிப்பு! ஹோர்முஸ் நீரிணையில் பிரிட்டிஷ் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்!எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்!நீட் தேர்வு முடிவுகள்: மனநல ஆலோசனைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்!தமிழ்நாடு முழுவதும் 50 டெண்டர்கள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி!
/

டார்ஸான் தொடர் ஹாலிவுட் நடிகர் காலமானார்!

டார்ஸான் புகழ் ஹாலிவுட் நடிகர் ரான் எலி காலமானார்!

News image
Updated On :24 அக்டோபர் 2024, 5:49 am IST

லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகளவில் பார்வையாளர்களின் மனதில் தனி இடம்பிடித்த, 1960-ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஒளிபரப்பட்ட தொலைக்காட்சி தொடரான ‘டார்ஸான்’ தொடரில் கதாநாயகனாக நடித்த ஹாலிவுட் நடிகர் ‘ரான் எலி’ காலமானார். அவருக்கு வயது 86.

Story image

AP

தனது தந்தை உயிரிழந்துவிட்ட தகவலை அவருடைய மகள் கிர்ஸ்டன் கசேல் எலி புதன்கிழமை(அக்.23) தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் லாஸ் அலாமோஸ் பகுதியிலுள்ள தனது வீட்டில் கடந்த மாதம் (செப். 29) அவர் இறுதிமூச்சைவிட்டதாக அவரது மகள் தெரிவித்துள்ளார்.

நடிப்பதுடன் நிறுத்தாமல், 1980-ஆம் ஆண்டு காலகட்டத்தில் மிஸ் அமெரிக்கா அழகிப்போட்டி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியுள்ளார் ரான் எலி. 2001-ஆம் ஆண்டுக்கு பின் நடிப்புத்துறையிலிருந்து விலகி முழு நேரமும் குடும்பத்துக்காக செலவிடுவதாக தெரிவித்திருந்தார் எலி.

6 அடி 4 இன்ச் உயரத்தில் கட்டுமஸ்தான உடல் அமைப்பையும் கொண்டு பார்வையாளர்களை கவர்ந்த ரான் எலி, ஒரு எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர்.

இந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு, அவரது மனைவி வாலெரி லண்டீன் எலி(62), அவரது மகன் கேமரூன் எலியால்(30) வீட்டில் வைத்தே குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவரது மகன் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.