மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சந்தானம்- செல்வராகவன் இணையும் புதிய படம்: பூஜையுடன் தொடங்கியது!

இயக்குனர் செல்வராகவன் - நடிகர் சந்தானம் முதன் முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

News image
Updated On :4 டிசம்பர் 2016, 11:01 am

DIN

சென்னை:  இயக்குனர் செல்வராகவன் - நடிகர் சந்தானம் முதன் முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

எஸ்.ஜெ .சூர்யா, நந்திதா நடிப்பில், இயக்குனர் செல்வராகவன் உருவாக்கியுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் தற்போது முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து நடிகர் சந்தானத்தை வைத்து நகைச்சுவை கலந்த காதல் படத்தை செல்ராகவன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. சந்தானமும், செல்வராகவனும் சேர்ந்து நிற்பது போன்ற புகைப்படத்தை இருவரும் தத்தமது டிவிட்டர் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.

மிகுந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கதாநாயகி யார் என்று படக்குழுவினர் இன்னும் முடிவெடுக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.