மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சிவகார்த்தியேனின் புதிய அம்மாவாக ரோகிணி!

நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் அவருக்கு அம்மாவாக பிரபல நடிகை ரோஹிணி  நடிக்க உள்ளார்.  

News image
Updated On :6 நவம்பர் 2016, 11:58 am

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் அவருக்கு அம்மாவாக பிரபல நடிகை ரோஹிணி  நடிக்க உள்ளார்.  

ரெமோ படத்தினைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக மோகன் ராஜா இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி நயன்தாரா. இந்த  படத்தில்தான் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக பிரபல நடிகை ரோகிணி ஒப்பந்தமாகியுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் 11-ந் தேதி தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.  இந்த படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சினேகா, தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.