மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரெமோ நன்றி விழாவில் தயாரிப்பாளருக்குப் புகழாரம்!

ரெமோ படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதையடுத்து, இதன் நன்றி விழா நேற்று நடைபெற்றது.

News image
Updated On :12 அக்டோபர் 2016, 9:20 am

DIN

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரெமோ படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். ஆர்.டி. ராஜா தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவு - பி.சி. ஸ்ரீராம், இசை - அனிருத்.

ரெமோ படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதையடுத்து, இதன் நன்றி விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னணி விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமணியம் கூறும்போது: ரஜினி நடித்த சிவாஜி படத்துக்குப் பிறகு நான் விநியோகம் செய்வதில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. ஆனால் ரெமோ படம் எனக்கு அளித்த உற்சாகமும், புத்துணர்வும் என்னை மீண்டும் விநியோகத் துறையில் ஈடுபட வைத்துள்ளது. பொதுவாகவே விநியோகஸ்தர் தான் ஒரு திரைப்படத்தை வாங்க தயாரிப்பாளரை நாடிச் செல்வர். ஆனால் தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா எவ்வித ஈகோவும் இன்றி எங்களை வந்து சந்தித்தார். இந்தப் படத்தால் எல்லா விநியோகஸ்தர்களும் மகிழ்ச்சியாக உள்ளோம். ரெமோ படத்தின் வெற்றிக்கு முக்கிய தூண், அதன் தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா என்று நான் உறுதியாகவே சொல்வேன்’ என்றார்.  

ரெமோ படத்தில் நடித்த கே.எஸ். ரவிக்குமார் கூறியதாவது: ஒரு திரைப்படத்திற்கு நன்றி விழா என்பதை நான் இப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கிறேன். சினிமா மீது அளவு கடந்த அன்பும், சினிமாவுக்காக தன்னையே அர்ப்பணித்துக்கொள்ளும் குணம் கொண்ட மனிதர்களால்தான்  இத்தகைய செயல்களைச் செய்யமுடியும். அப்படி நான் பார்த்த  தயாரிப்பாளர்களுள்  ஆர் பி சொளத்ரி, ஏ எம் ரத்னம் போன்ற சிலரை தான் நான் பார்த்துள்ளேன். அப்படி ஒரு தயாரிப்பாளராக தற்போது ராஜாவைப் பார்க்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.