குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நயன்தாராவின் நடிப்பில் உருவாகவிருக்கும் யூ-டர்ன்!

வித்யாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டும் நடிகை நயன்தாரா

News image
Updated On :11 டிசம்பர் 2017, 10:46 am

DIN

வித்யாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வமுடையவர் நடிகை நயன்தாரா. கோலிவுட்டில் மட்டுமின்றி டோலிவுட்டிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பதன் காரணம் அவரது கதைத் தேர்வு எனலாம். தன்னுடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் அண்மையில் வெளியான படம் அறம். இது பரவலான கவனம் பெற்று சூப்பர் ஹிட் ஆனது.

Story image

தமிழில் நயன் நடிப்பில் வெளியாகவிருக்கும் அடுத்த படம் 'கோலமாவு கோகிலா'. இது முற்றிலும் வித்தியாசமான படம். முழுக்க நாயகியை மையமாக கொண்ட இப்படத்தை அறிமுக இயக்குநர் நெல்சன் இயக்கி வருகிறார். அதனைத் தொடர்ந்து தற்போது நயன்தாரா புதிய படமொன்றில் நடிக்க உள்ளார்.

Story image

'சைத்தான்', சத்யா ஆகிய படங்களை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தியின் அடுத்த படம் கன்னட படமான யூ டர்னின் ரீமேக்.  சஸ்பென்ஸ் திரில்லர் இன வகையில் உருவான அந்தப் படம் சாண்டல்வுட்டில் சூப்பர் ஹிட்டானது.

Story image

பவன்குமார் இயக்கத்தில், ஷ்ரத்தா ஸ்ரீநாத், 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நிறுவனத்தின் நிருபராக நடித்திருந்தார். வேலை விஷயமாக அவர் தேடிச் செல்லும் ஒவ்வொரு நபரும் மர்மமான முறையில் விபத்தில் அல்லது தற்கொலை செய்து கொண்டும் இறக்கிறார்கள். அதன் காரணத்தைத் கண்டுபிடிக்க முயற்சி செய்யும் ஷ்ரத்தாவுக்கு ஏற்படும் அதிர்ச்சியை நெகிழ்ச்சியான கதை சொல்லலின் மூலம் கூறியிருப்பார் இயக்குநர். தமிழில் சில மாற்றங்கள் செய்து, அதே கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கவிருக்கிறார்.

Story image

நயன்தாரா இந்தப் படத்தை தானே தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் அதிகாரபூர்வமாக இது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. புதிய அவதாரத்தில், அடுத்த ஹிட்டுக்கு தயாராகிவிட்டார் நயன்தாரா என்கிறது கோலிவுட் வட்டாரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.