மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராஜிநாமா வாபஸ் ஏன்?: நடிகர் சங்கத் துணைத்தலைவர் பொன்வண்ணன் விளக்கம்! 

நடிகர் சங்கத் துணைத்தலைவர் பதவி ராஜிநாமா முடிவை வாபஸ் பெற்றது ஏன் என்று, நடிகர் பொன்வண்ணன், தற்போது விளக்கமளித்துள்ளார்.

News image
Updated On :13 டிசம்பர் 2017, 1:05 pm

DIN

சென்னை: நடிகர் சங்கத் துணைத்தலைவர் பதவி ராஜிநாமா முடிவை வாபஸ் பெற்றது ஏன் என்று, நடிகர் பொன்வண்ணன், தற்போது விளக்கமளித்துள்ளார்.

நடிகர் விஷால் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் மற்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என ஒரே நேரத்தில் இரண்டு பதவிகளை வகித்து வருகிறார். அதே சமயம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட விரும்பி அவர் மனுத்தாக்கல் செய்தது திரையுலகில் சர்ச்சைகளை எழுப்பியது.

சங்கத்தில் பொறுப்பில் இருக்கும் பொழுது அவர் தேர்தலில் நிற்பது சங்க விதிகளுக்கு முரணானது என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர். இதன் எதிரொலியாக, நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் பொன்வண்ணன் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக கடிதம் எழுதி, அதனை நடிகர் சங்கத்தின் தலைவர் நாசருக்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் டிசம்பர் 11-ம் தேதி நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டத்தில்,   பொன்வண்ணனின் ராஜிநாமாவை ஏற்றுக் கொள்வதில்லை என்று நடிகர் சங்கம் தீர்மானித்தது. அதே சமயம்  அவருடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள அவகாசமும் கொடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் பதவி ராஜிநாமா முடிவை வாபஸ் பெறுவதாக பொன்வண்ணன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

நடிகர் சங்கத்திற்கு என கட்டிடம் கட்டி முடிக்க வேண்டும். அத்துடன் மலேசியா சென்று சிறப்பாக கலை நிகழ்ச்சி முடித்துவிட்டு, அடுத்த ஆறு மாத காலம் நல்ல முறையில் செயல்பட வேண்டும் ஆகிய வேலைகள் எங்கள் முன்னால் உள்ளன.

இதர நண்பர்களை விட தீவிரமாகப் பணியாற்ற வேண்டிய கட்டத்தில் இருப்பதினால் நான் நடிகர் சங்க துணைத் தலைவர் பொறுப்பை மீண்டும் ஏற்றுகொண்டு நண்பர்களுடன் இணைந்து நடிகர் சங்கத்துக்காக என் பணியினை தொடர்ந்து செய்வேன்.

அதே சமயம் நடிகர் சங்கத்தில் இருந்து கொண்டு அரசியலில் ஈடுபடுவதில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை என்ற என் தனிப்பட்ட கருத்தில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

இவ்வாறு பொன்வண்ணன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.