மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

என்னை கட்டுப்படுத்த வேண்டாம்: தயாரிப்பாளர் சங்கம் மீது சீறிய பார்த்திபன்!

சட்ட திட்டங்ககளுக்குஉட்பட்டு பட விளமபரங்கள் செய்ய வேண்டுமென்று என்னை கட்டுப்படுத்த வேண்டாம் என்று தயாரிப்பாளர் சங்கத்தின்ம மீது நடிகர் பார்த்திபன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:46 am

DIN

சென்னை: சட்ட திட்டங்ககளுக்குஉட்பட்டு பட விளமபரங்கள் செய்ய வேண்டுமென்று என்னை கட்டுப்படுத்த வேண்டாம் என்று தயாரிப்பாளர் சங்கத்தின்ம மீது நடிகர் பார்த்திபன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி நடித்துள்ள 'கோடிட்ட இடங்களை நிரப்புக' திரைப்படம் பொங்கலன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் சாந்தனு, பார்வதி நாயர் மற்றும் தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதினால் கலந்து கொண்ட பார்த்திபன், பட விளமபர கட்டுப்பாடுகளில் தயாரிப்பாளர் சங்கத்தின் மீது தனக்கு இருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். நிகழ்வில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் மொத்தமுள்ள 1000 திரையரங்குகளில், 800 அரங்குகளில் விஜய் நடித்துள்ள 'பைரவா' திரைப்படம் வெளியாகியுள்ளது. மீதமுள்ள 200 இடங்களில் மட்டுமே 'கோடிட்ட இடங்களை நிரப்புக' வெளியாகியுள்ளது. 'பைரவா' போன்ற பெரிய படத்தோடு ஒப்பிடும் பொழுது, எனது படத்திற்கு செய்தித்தாள்களில் முழுப்பக்க அளவிற்கு விளம்பரம் கொடுக்க வேண்டியுள்ளது.

ஆனால் தமிழக திரைப்பட தயாரிப்பாளர் சங்கமானது அவர்களுடைய விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே விளம்பரங்கள் வெளியிடப்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.ஆனால் 'பைரவா'வுக்கு இணையாக எனது 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்துக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை. எனவே என்னுடைய விளம்பரங்களை கட்டுப்படுத்த முடியாது.

ஒன்று எங்களுக்கு சுதந்திரம் அல்லது சமத்துவம் கொடுங்கள் அல்லது விளம்பரம் செய்யும் விவிகாரத்தில் எங்களை கட்டுப்படுத்த முயற்சி செய்யாதீர்கள்.

இவ்வாறு அந்த நிகழ்வில் பார்த்திபன் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.