மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

வீடியோ சர்ச்சை குறித்த கேள்விகள்: பேட்டியின் பாதியில் வெளியேறிய தனுஷ்! (வீடியோ)

மண வாழ்க்கையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதா என்கிற கேள்வியைக் கேட்டபோது மேலும் கோபமடைந்தார் தனுஷ்.

News image
Updated On :24 ஜூலை 2017, 7:08 am

வேலையில்லா பட்டதாரி 2 பட விளம்பர நிகழ்ச்சிகளுக்காக ஹைதராபாத் சென்ற தனுஷ், தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தபோது சர்ச்சைக்குரிய கேள்விகள் கேட்கப்பட்டதால் பாதியில் வெளியேறினார்.

படம் தொடர்புடைய பேட்டியில் பங்கேற்ற தனுஷிடம் சர்ச்சைக்குரிய கேள்விகள் கேட்கப்பட்டன. சுசித்ரா ட்விட்டர் சர்ச்சை தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விகளால் கடுப்பானார் தனுஷ். தனுஷின் வீடியோ வெளியிடப்படுவதாகச் சொன்னதால் மன உளைச்சல் உண்டானதா என்கிற கேள்விக்கு மறுத்துப் பதில் அளித்தார் தனுஷ். தன் மீது எவ்வித குற்றச்சாட்டும் கிடையாது என்றார். 

அவருடைய மண வாழ்க்கையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதா என்கிற கேள்வியைக் கேட்டபோது மேலும் கோபமடைந்தார் தனுஷ். இது ஒரு கேவலமான பேட்டி என்று பேட்டியின் பாதியிலேயே வெளியேறினார்.

பிறகு தனுஷைச் சமாதானம் செய்து பேட்டி முழுமையாகப் படமாக்கப்பட்டது. அப்போது படம் தொடர்பான கேள்விகளே தனுஷிடம் கேட்கப்பட்டன. 

சில மாதங்களுக்கு முன்பு, பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் இருந்து தனுஷ் மற்றும் இதர பிரபலங்களைப் பற்றி பல்வேறு விதமான ட்வீட்கள் வெளியாகின. இதனால் ட்விட்டர் வலைத்தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேச் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. பிரபல நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள், வீடியோக்கள், மின்னஞ்சல்கள் என தனிப்பட்ட தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டதால் தமிழ்த் திரையினர் மிகுந்த கவலையடைந்தனர். பிறகு, அத்தகைய புகைப்படங்களும் வீடியோக்களும் அவருடைய ட்விட்டர் கணக்கிலிருந்து அகற்றப்பட்டன. சுசித்ராவின் ட்விட்டர் கணக்கும் நீக்கப்பட்டது. இதனால் சுசித்ராவின் ட்விட்டர் சர்ச்சைகளுக்கு முடிவுகட்டப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.