தொலைப்பேசி வழியாகத் தனக்குக் கொலை மிரட்டல் வந்ததாக பிரபல பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
நேற்று இரவு தனக்கு ஒருவர் போன் செய்தார். அப்போது, தான் அந்த நபருக்கு ரூ. 50 லட்சம் தரவேண்டும் என்றும் லக்னோவைச் சேர்ந்த ஒரு வங்கியில் பணத்தை டெபாசிட் செய்யாவிட்டால் தன்னையும் தன் மனைவி சோனி ரஸ்தான், மகள் ஆலியா பட் ஆகியோரைக் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டதாக மகேஷ் பட் கூறியுள்ளார்.
முக்கியமாகப் பணம் தர மறுத்தால் மனைவி, மகளைத் துப்பாக்கியால் சுட்டுப் பொசுக்கிவிடுவோம் என்றும் மகேஷ் பட் மிரட்டப்பட்டுள்ளார். முதலில் இந்தத் தொலைப்பேசி அழைப்பை ஏதோ ஒரு வேடிக்கையான அழைப்பாகக் கருதியுள்ளார் மகேஷ் பட். ஆனால் பேசும்போது மிகுந்தத் தீவிரத்துடனும் மிரட்டல் தொனியுடனும் பேசியதோடு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டதால் வேறு வழியின்றி ஜூஹூ காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.
தற்போது மகேஷ் பட் குடும்பத்துக்கு காவல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!

வாக்களிப்பதற்காக சிவகங்கை சென்றவா் பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் மயங்கி விழுந்து பலி

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


