

தெறி படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி கூட்டணி மீண்டும் இணையும் புதிய படம் தொடர்புடைய தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். மேலும் சத்யராஜ், எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு, சத்யன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் பங்கேற்கிறது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100-வது படம் இது.
ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். பிப்ரவரி 1-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கியது.
தற்போது படம் குறித்த புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
* படத்தில் விஜய்க்கு மூன்று வேடம்.
* சென்னை பின்னி மில்ஸில் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
*ஏப்ரல் 14 அன்று படத்தின் தலைப்பு வெளியிடப்படும்.
* அதே தினத்தில் படத்தின் முதல் பார்வையும் வெளியிடப்படும். தெறி கடந்த வருடம் இதே நாளில் வெளியானதால் அதைக் கொண்டாடும் விதமாக அந்தத் தினத்தில் படத்தின் விளம்பரங்கள் ஆரம்பமாகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.