சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

'பிக்பாஸ்' புகழ் ஆரவ் ஹீரோவாக நடிக்கும் தமிழ்ப்படம்! 

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெற்றிகரமாக முடிந்த 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் வெற்றியாளராகத் தேர்வான ஆரவ், ஹீரோவாக நடிக்கும் புதிய தமிழ்ப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:58 pm

DIN

சென்னை: சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெற்றிகரமாக முடிந்த 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் வெற்றியாளராகத் தேர்வான ஆரவ், ஹீரோவாக நடிக்கும் புதிய தமிழ்ப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்த 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் முதல் சீசனில் விளம்பர மாடலும், நடிகருமான ஆரவ் வெற்றியாளராகத் தேர்வானார். இதற்குப் பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வருவதாக கூறப்பட்ட நிலையில், அவர் கதாநாயகனாக நடிக்கும புதிய படம் பற்றிய அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது.

சிம்பு நடிப்பில் 'சிலாம்பாட்டம் என்ற படத்தினை இயக்கியவர் ஒளிப்பதிவாளர் சரவணன். பின்னர் கெளதம் கார்த்திக், லட்சுமி மேனன் நடிப்பில் 'சிப்பாய்' என்ற படத்தினை இயக்கினார். ஆனால் படம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்பொழுது அவர் இந்த படத்தினை இயக்க இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

Story image

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்குப் பிறகு ஆரவ் தமிழக மக்களுக்கு நன்கு அறிமுகமாகியுள்ளார். எனவே அவரை எனது படத்தில் கதாநாயகனாக நடிக்க  வைத்தால் நன்றாக இருக்கும் என்று முடிவெடுத்தேன். இது முழுக்க பெரும்பான்மையினருக்கான பொழுதுபோக்கு படமாக இருக்கும். கதை கிராமம் மற்றும் நகரம் இரண்டிலும் நடைபெறுவது போல உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் பிற பாத்திரங்களுக்கான நடிக நடிகையர் தேர்வு குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. படப்பிடிப்பினை நவம்பர் மாதம் முதல் துவக்க இருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். இதற்கு முன்பாக நடிகர் ஆரவ் சைத்தான், காதல் கண்மணி உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.