உண்மையில் ஷெரில் அந்தக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இந்த ஆண்டு ஓணம் திருநாளும், ஆசிரியர் தினமும் ஒன்றாக வந்ததால் மாணவர்களிடையே ஒரு நல்ல உறவை மேம்படுத்த இந்தப் பாடலுக்கு மாணவிகளுடன் இணைந்து நடனமாடியதாக ஷெரில் தெரிவித்துள்ளார். மேலும் இதனால் சில மலையாள படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பும் இவரைத் தேடி வந்துள்ளது. இதுவரை அந்தப் படங்களில் நடிப்பது பற்றி எந்தவொரு முடிவும் ஷெரில் எடுக்காத நிலையில், தமிழ்ப் படங்கள் என்றால் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், வாய்ப்பு கிடைத்தால் தமிழ்ப் படத்தில் நடிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.